என் மலர்
செய்திகள்

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் பறித்த ஆசாமி: பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
ஈரோடு:
திருச்செங்கோடு ஆயித்தா பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் சின்னுசாமி (வயது 46).
ஈரோடு வந்த இவர் தனது நண்பர் சுப்புராஜ் என்பவருடன் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பார்க்குக்கு டவுன் பஸ்சில் சென்றார்.
இந்த பஸ் சவீதா பஸ் நிறுத்தம் அருகே மெதுவாக சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒரு ஆசாமி சின்னுசாமியின் சட்டைப்பையில் இருந்த ரூ. 200–ஐ நைசாக ஜேப்படி செய்தார். இதை பார்த்து விட்ட சின்னசாமி அந்த ஆசாமியை பிடிக்க முயன்றார். அப்போது அவர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்.
உடனே சின்னுசாமி அவரது நணபர் சுப்புராஜ் மற்றும் பொதுமக்கள் அந்த ஆசாமியை விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஈரோடு டவுன் போலீசார் அந்த ஆசாமியிடம் விசாரித்த போது அவர் ஈரோடு சூரம்பட்டி பாரதி புரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 48) என்பது தெரிய வந்தது.
இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து அவர் ஜேப்படி செய்த ரூ. 200 ஐ கைப்பற்றினர்.






