என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியை முற்றுகையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
    X

    வங்கியை முற்றுகையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

    கடலூரில் வங்கியை முற்றுகையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கல்விக்கடன் வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த மத்திய அரசு மற்றும் ஸ்டேட் பாங்கி நிர்வாகத்தை கண்டித்தும், கல்வி கடனை முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேட் பாங்க் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் அமர்நாத் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லை. கலைந்து செல்லுங்கள் என அறிவுறுத்தினர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் அவர்கள் 20 பேர் கைது செய்தனர்.
    Next Story
    ×