என் மலர்
செய்திகள்

பண்ருட்டியில் கல்லூரி மாணவர் மாயம்
பண்ருட்டியில் கல்லூரி சென்ற மாணவர் மாயமானது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள அக்கடவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் விவசாயி. இவரது மகன் பரணி (வயது 19). கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார்.
கடந்த 19–ந் தேதி பரணி கல்லூரிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவர் பரணியை தேடி வருகின்றனர்.
Next Story






