என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேரை கைது மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கை கொண்டசோழபுரத்தை சேர்ந்த பண்டரிநாதன் மனைவி தனலெட்சுமி (வயது 65). இவருக்கும் அதே ஊரைசேர்ந்த வெங்கடாசலம் மகன் சீதாபதி(34) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 15-ம் தேதியன்று ஏற்பட்ட தகராறில் சீதாபதி மற்றும் சிலர் சேர்ந்து வீட்டிலிருந்த தனலட்சுமியை திட்டி தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த தனலெட்சுமியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குபதிந்து சீதாபதி, குருவாலப்பர்கோவில் பாரதி (35), தொட்டிகுளம் மோகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கை கொண்டசோழபுரத்தை சேர்ந்த பண்டரிநாதன் மனைவி தனலெட்சுமி (வயது 65). இவருக்கும் அதே ஊரைசேர்ந்த வெங்கடாசலம் மகன் சீதாபதி(34) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 15-ம் தேதியன்று ஏற்பட்ட தகராறில் சீதாபதி மற்றும் சிலர் சேர்ந்து வீட்டிலிருந்த தனலட்சுமியை திட்டி தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த தனலெட்சுமியை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குபதிந்து சீதாபதி, குருவாலப்பர்கோவில் பாரதி (35), தொட்டிகுளம் மோகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
Next Story






