என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
    X

    செந்துறை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

    செந்துறை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமம் கீழத்தெருவில் தனிநபர் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து கழிவுநீரும் தெருவில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    அந்த கழிவு நீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வருபவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இது குறித்து கிராம சுகாதார ஆய்வாளர், வட்டார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்தவித எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×