என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரக்கு ஆட்டோ மீது வேன் மோதி 6 பேர் படுகாயம்
    X

    சரக்கு ஆட்டோ மீது வேன் மோதி 6 பேர் படுகாயம்

    சரக்கு ஆட்டோ மீது வேன் மோதிய விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    கோபியை அடுத்த சிறுவலூர், கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வேஸ்வரன்(வயது37). சரக்கு ஆட்டோ டிரைவராக உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் கோபி கரட்டூருக்கு வந்து விட்டு சிறுவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த மாரப்பன், ஆனந்தன், மூர்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோரும் இந்த ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    கோபி–குன்னத்தூர் மெயின் ரோட்டில் சென்ற போது எதிரே மாருதி வேன் வந்து கொண்டிருந்தது. வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலைதடுமாறிய வேன் கவிழ்ந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்த விஸ்வேஸ்வரன், மாரப்பன்,ஆனந்தன், மூர்த்தி, சண்முகசுந்தரம், மாருதி வேனில் பயணம் செய்த சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆனந்தன், மூர்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×