என் மலர்
செய்திகள்

மாமல்லபுரம் கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மாமல்லபுரம் கடற்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 125 கடைகள் இடித்து அப்புறப்படுத்தி பின்புறம் அரசு ஒதுக்கி கொடுத்துள்ள இடத்தில் கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்புறம் கடற்கரைக்கு செல்லும் வழியில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இடத்தை ஆக்கிரமித்து 125 கடைகள் இருந்தது. இதனால் கடல் அலையில் சிக்குவோரை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கடற்கரை அருகில் வர முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
இதை சரிசெய்யும் வகையில் பல மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் நில ஆய்வு மேற்கொண்ட போது ஆக்கிரமிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டது. கடைகள் நடத்துவோர் 6 மாதம் அவகாசம் கேட்டதால் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மத்திய சுற்றுலாத்துறை மண்டல இயக்குனர் சோஹெப் சாமெத் கடலோர சுற்றுலா தல மேம்பாட்டுக்காக மாமல்லபுரம் கடற்கரை வழியை ஆய்வு செய்த போது கடைகள் இன்னும் அகற்றாததை காரணம் கேட்டார்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அனைவருக்கும் காலக்கெடு முடிந்ததை சுட்டிக்காட்டி தற்காலிக வாடகை செலுத்தும் 125 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதும் அனைவரும் தானாக முன் வந்து கடைகளை இடித்து அப்புறப்படுத்தி பின்புறம் அரசு ஒதுக்கி கொடுத்துள்ள இடத்தில் கடைகளை கட்டி வருகிறார்கள்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்புறம் கடற்கரைக்கு செல்லும் வழியில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இடத்தை ஆக்கிரமித்து 125 கடைகள் இருந்தது. இதனால் கடல் அலையில் சிக்குவோரை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கடற்கரை அருகில் வர முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
இதை சரிசெய்யும் வகையில் பல மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் நில ஆய்வு மேற்கொண்ட போது ஆக்கிரமிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டது. கடைகள் நடத்துவோர் 6 மாதம் அவகாசம் கேட்டதால் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மத்திய சுற்றுலாத்துறை மண்டல இயக்குனர் சோஹெப் சாமெத் கடலோர சுற்றுலா தல மேம்பாட்டுக்காக மாமல்லபுரம் கடற்கரை வழியை ஆய்வு செய்த போது கடைகள் இன்னும் அகற்றாததை காரணம் கேட்டார்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அனைவருக்கும் காலக்கெடு முடிந்ததை சுட்டிக்காட்டி தற்காலிக வாடகை செலுத்தும் 125 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதும் அனைவரும் தானாக முன் வந்து கடைகளை இடித்து அப்புறப்படுத்தி பின்புறம் அரசு ஒதுக்கி கொடுத்துள்ள இடத்தில் கடைகளை கட்டி வருகிறார்கள்.
Next Story






