என் மலர்
செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
திருக்கழுக்குன்றம்:
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில், ருத்திரகோடீஸ்வரர் கோவில், பக்தவச்சலேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைவலம் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் உடைய திருக்கழுக்குன்றத்தில் உள்ள சன்னதிதெரு, மசூதி தெரு, அக்ரஹாரதெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து பழக்கடைகள், காய்கறிகடைகள், பூக்கடைகள், பழைய இரும்புகடைகள் கட்டப்பட்டிருந்தன.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வழியாக செல்லக் கூடியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள். இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா வரும் ஆகஸ்டு மாதம் 2–ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழா தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் திருக்கழுக்குன்றம் சன்னதிதெரு, கடைவீதி, அக்ரஹாரதெருக்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அகற்றினர். அப்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, வருவாய்துறை, பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். திருக்கழுக்குன்றம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில், ருத்திரகோடீஸ்வரர் கோவில், பக்தவச்சலேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைவலம் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் உடைய திருக்கழுக்குன்றத்தில் உள்ள சன்னதிதெரு, மசூதி தெரு, அக்ரஹாரதெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து பழக்கடைகள், காய்கறிகடைகள், பூக்கடைகள், பழைய இரும்புகடைகள் கட்டப்பட்டிருந்தன.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வழியாக செல்லக் கூடியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள். இந்த நிலையில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா வரும் ஆகஸ்டு மாதம் 2–ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழா தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் திருக்கழுக்குன்றம் சன்னதிதெரு, கடைவீதி, அக்ரஹாரதெருக்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அகற்றினர். அப்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா, வருவாய்துறை, பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். திருக்கழுக்குன்றம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story






