என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் விவசாயிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
    X

    பண்ருட்டியில் விவசாயிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

    பண்ருட்டியில் விவசாயை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் உள்ள பெரிய இலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த வாகிசன்(வயது 39). விவசாயி. இவருக்கும் எஸ். எரிபாளையத்தை சேர்ந்த வசந்த் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வாகிசன் அவரது மனைவி அனுசுயாவுடன் சென்றபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வசந்த் கையில் வைத்திருந்த கத்தியால் வாகிசன் கழுத்து மற்றும் முதுகில் குத்தி காயப்படுத்தினார்.

    இதனை தடுக்க சென்ற அவரது மனைவி அனுசுயாவையும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் அனுசுயா அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×