என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் விதிமீறல் வழக்கு: பரங்கிப்பேட்டை கோர்ட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆஜர்
    X

    தேர்தல் விதிமீறல் வழக்கு: பரங்கிப்பேட்டை கோர்ட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆஜர்

    தேர்தல் விதிமுறைகள் மீறி செயல்பட்டதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.

    சிதம்பரம்:

    கடந்த 2011–ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காலை 10.30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆஜரானார். நீதிபதி வாசுதேவன் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18–ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×