என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் பாலிடெக்னிக் மாணவர் மாயம் போலீசார் விசாரணை
தேவகோட்டையில் பாலிடெக்னிக் மாணவர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
தேவகோட்டை தாலுகா சாதிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அரவிந்தசாமி (வயது22). இவர் செட்டி நாட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார்.
சம்பவத்தன்று அரவிந்தசாமி, கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த முருகேசன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர், தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மாயமான அரவிந்தசாமி தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






