என் மலர்
செய்திகள்

கடலூரில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
கடலூரில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா வரும் 27-ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கடலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 27.7.2016(புதன் கிழமை) மாலை 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்வு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் நுகர்வோர் தன்னார்வ அமைப்பாளர்கள் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே வட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பின்னர் மாலை 4.30 மணி அளவில் 2016-ம் ஆண்டிற்கான நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டமும் நடைபெற உள்ளது. அனைத்து நுகர்வோர் தன்னார்வ அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) விஜயா கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கடலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 27.7.2016(புதன் கிழமை) மாலை 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்வு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் நுகர்வோர் தன்னார்வ அமைப்பாளர்கள் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடையே வட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பின்னர் மாலை 4.30 மணி அளவில் 2016-ம் ஆண்டிற்கான நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டமும் நடைபெற உள்ளது. அனைத்து நுகர்வோர் தன்னார்வ அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) விஜயா கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story






