என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் பயிற்சி முகாம்
    X

    கடலூரில் ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் பயிற்சி முகாம்

    கடலூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் பயிற்சி முகாமை கலெக்டர் விஜயா தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரின் அறிவுரைப்படி ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் எண், செல் நம்பர் இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்கும் பயிற்சி முகாம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொறுப்பு) விஜயா தலைமையில் இன்று நடந்தது.

    இதில் கூட்டுறவு துறை, வருவாய்துறை, நுகர்வோர் வாணிப அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர் சாமுவேல்ராஜ் பயிற்சி அளித்தார்.

    குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆதார் எண், செல் நம்பர் ஆகியவற்றை இணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

    மேலும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ஒவ்வொரு நியாய விலை கடைக்கும் அனுப்பும் போது அதன் விவரம் குறுந்தகவல் மூலம் விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும்.

    அதே மாதிரி கடையில் உள்ள இருப்பு விவரத்தையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி இன்னும் எவ்வளவு அரிசி, மண்எண்ணெய் வாங்கலாம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    விற்பனை செய்யப்படும் பொருட்களின் விவரம் கம்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதனால் ரேசன் கடையில் இருப்பு குறைவு, போலி பட்டியல் தயார் செய்வது தடுக்கப்படுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் (பொறுப்பு) சக்தி சரவணன், துணைபதிவாளர் சங்கர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பூவேந்திரன் மாவட்ட வழங்கல் அலுவலர் நுகர்வோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×