என் மலர்
செய்திகள்

பண்ருட்டியில் கனமழை: இடிதாக்கி பெண் காயம்
பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் பெண் காயம் அடைந்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி ஜெயம்(35). மழைபெய்து கொண்டிருந்தபோது ஜெயம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது இடித்தாக்கியதில் அவர் உடல் கருகியது.
வீட்டில் இருந்தவர்கள் ஜெயத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சூறைக்காற்று காரணமாக பண்ருட்டி அண்ணா கிராம பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்ப்பயிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின.
பண்ருட்டி லட்சுமிநகரில் உள்ள பெரிய மரம் கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்தது.
பண்ருட்டியில் தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் பண்ருட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது.
Next Story






