என் மலர்
செய்திகள்

விஷம் குடித்து தற்கொலை முயற்சி: ஆம்புலன்ஸ் வராததால் 4 மணி நேரம் உயிருக்கு போராடிய தொழிலாளி
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வராததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி 4 மணி நேரம் உயிருக்கு போராடினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (24) கூலி தொழிலாளி.
கடந்த சில நாட்களாக இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதில் மனமுடைந்த கிருஷ்ணன் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க டாக்டர்கள் பரிந்துரை செய்து 1.30 மணி அளவில் அனுமதி சீட்டு அளித்தனர். செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ணனை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே ஒரு நோயாளியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் வேறு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதனால் உயிருக்கு போராடிய கிருஷ்ணனை பார்த்து உறவினர்கள் தவித்தனர்.
இதற்கிடையே செங்கல்பட்டுக்கு சென்ற ஆம்புலன்ஸ் சுமார் 4 மணி நேரம் தாமதமாக 5-50 மணிக்கு காஞ்சீபுரத்துக்கு திரும்பி வந்தது.
பின்னர் கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது அவர் நலமாக உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 46 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் பயன் பெறும் வகையினில் இவற்றில் 15 ஆம்புலன்சுகள் செயல்பட்டு வருகின்றன.
காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சென்னை அல்லது செங்கல்பட்டு கொண்டு செல்ல பொது நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பிரிவிற்காக இரண்டு ஆம்புலன்சுகள் உள்ளன.
காஞ்சீபுரத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிக்கடி விபத்தில் சிக்குபவர்கள் சிகிச்சை பெற கூடுதல் ஆம்புலன்சுகளை இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, சென்னை அல்லது செங்கல்பட்டு அஸ்பத்திரிகளுக்கு மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்ல காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஆம்புலன்ஸ்கள் இல்லை.
செங்கல்பட்டு செல்லும் ஆம்புலன்ஸ் திரும்பி வரும் வரை நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (24) கூலி தொழிலாளி.
கடந்த சில நாட்களாக இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதில் மனமுடைந்த கிருஷ்ணன் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க டாக்டர்கள் பரிந்துரை செய்து 1.30 மணி அளவில் அனுமதி சீட்டு அளித்தனர். செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ணனை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே ஒரு நோயாளியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் வேறு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதனால் உயிருக்கு போராடிய கிருஷ்ணனை பார்த்து உறவினர்கள் தவித்தனர்.
இதற்கிடையே செங்கல்பட்டுக்கு சென்ற ஆம்புலன்ஸ் சுமார் 4 மணி நேரம் தாமதமாக 5-50 மணிக்கு காஞ்சீபுரத்துக்கு திரும்பி வந்தது.
பின்னர் கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது அவர் நலமாக உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 46 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் பயன் பெறும் வகையினில் இவற்றில் 15 ஆம்புலன்சுகள் செயல்பட்டு வருகின்றன.
காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சென்னை அல்லது செங்கல்பட்டு கொண்டு செல்ல பொது நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பிரிவிற்காக இரண்டு ஆம்புலன்சுகள் உள்ளன.
காஞ்சீபுரத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிக்கடி விபத்தில் சிக்குபவர்கள் சிகிச்சை பெற கூடுதல் ஆம்புலன்சுகளை இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, சென்னை அல்லது செங்கல்பட்டு அஸ்பத்திரிகளுக்கு மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை கொண்டு செல்ல காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய ஆம்புலன்ஸ்கள் இல்லை.
செங்கல்பட்டு செல்லும் ஆம்புலன்ஸ் திரும்பி வரும் வரை நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
Next Story






