என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டில் பி.எஸ்.என்.எல். வயர் திருட்டு: 1500 தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு
செங்கல்பட்டில் மர்மகும்பல் பி.எஸ்.என்.எல். வயரை திருடியதால் 1500 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு டவுன், பழைய ஜி.எஸ்.டி. சாலை குண்டூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கிருந்து செங்கல்பட்டு, திம்மாவரம், மையம், ஆத்தூர், மேலமையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே தரையில் புதைக்கப்பட்டு இருந்த கேபிள் வயரை சுமார் 50மீட்டர் தூரத்துக்கு வெட்டி எடுத்து திருடி சென்று விட்டனர். இதனால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியில் சுமார் 1500 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. டெலிபோன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர்.
டெலிபோன் வயரில் உள்ள காப்பர் கம்பிக்காக இந்த திருட்டு நடந்து இருப்பதாக தெரிகிறது. திருடப்பட்ட வயரின் மதிப்பு சுமார் ரூ. 1லட்சம் இருக்கும்.
இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி செங்கல்பட்டு தாலுக்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு டவுன், பழைய ஜி.எஸ்.டி. சாலை குண்டூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கிருந்து செங்கல்பட்டு, திம்மாவரம், மையம், ஆத்தூர், மேலமையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே தரையில் புதைக்கப்பட்டு இருந்த கேபிள் வயரை சுமார் 50மீட்டர் தூரத்துக்கு வெட்டி எடுத்து திருடி சென்று விட்டனர். இதனால் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியில் சுமார் 1500 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. டெலிபோன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர்.
டெலிபோன் வயரில் உள்ள காப்பர் கம்பிக்காக இந்த திருட்டு நடந்து இருப்பதாக தெரிகிறது. திருடப்பட்ட வயரின் மதிப்பு சுமார் ரூ. 1லட்சம் இருக்கும்.
இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி செங்கல்பட்டு தாலுக்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






