என் மலர்
செய்திகள்

அரியலூரில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கு மரச்சக்கர நாற்காலிகளையும், 7 நபர்களுக்கு ஊன்றுகோல்களையும் என மொத்தம் 15 நபர்களுக்கு ரூ.51 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story






