என் மலர்
செய்திகள்

செந்துறை அருகே 100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நூறு நாள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இலைக்கடம்பூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை அருகேயுள்ள இலைக்கடம்பூர் ஊராட்சியில் பணியாற்றி வரும் நூறு நாள் பணியாளர்களுக்கு கடந்த சில வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.இது குறித்து பணியாளர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியத்தை வங்கி மூலம் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். இலைக்கடம்பூர் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த செந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம்,காவல் ஆய்வாளர் ஜெபராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






