என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே தண்ணீர் பிடிக்கும் தகராறில் தாக்கப்பட்ட பெண் பலி: மாமியார், மருமகள் கைது
திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் தாக்கப்பட்ட பெண் இறந்தார். அவரை தாக்கிய மாமியார், மருமகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டியைச் சேர்ந்தவர் பேரின்பம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீதாலெட்சுமி (வயது 45).
இதே கிராமத்தைச் சேர்ந்த இவர்களுடைய உறவினர் ராஜாகண்ணன். இவருடைய மனைவி ரேவதி (35). திருப்பத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பராமரிப்பு பணிக்காக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், மாலையில் மின்சாரம் வந்தவுடன் அந்த பகுதியில் பொதுப் பயன்பாட்டிற்காக உள்ள மின் மோட்டார் மூலம் அப்பகுதியினர் தண்ணீர் பிடித்தனர். அப்போது, தண்ணீர் பிடிப்பதில் சீதாலெட்சுமிக்கும், ரேவதிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு கைகலப்பானது. அப்போது, ரேவதியும், அவருடைய மாமியார் வள்ளியும் (65) சேர்ந்து சீதாலெட்சுமியை அடித்து தாக்கி கீழே தள்ளினர். இதில், கீழே விழுந்த சீதாலெட்சுமியின் பின் தலையில் அடிபட்டு மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து ரேவதி, அவருடைய மாமியார் வள்ளி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டியைச் சேர்ந்தவர் பேரின்பம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீதாலெட்சுமி (வயது 45).
இதே கிராமத்தைச் சேர்ந்த இவர்களுடைய உறவினர் ராஜாகண்ணன். இவருடைய மனைவி ரேவதி (35). திருப்பத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பராமரிப்பு பணிக்காக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர், மாலையில் மின்சாரம் வந்தவுடன் அந்த பகுதியில் பொதுப் பயன்பாட்டிற்காக உள்ள மின் மோட்டார் மூலம் அப்பகுதியினர் தண்ணீர் பிடித்தனர். அப்போது, தண்ணீர் பிடிப்பதில் சீதாலெட்சுமிக்கும், ரேவதிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு கைகலப்பானது. அப்போது, ரேவதியும், அவருடைய மாமியார் வள்ளியும் (65) சேர்ந்து சீதாலெட்சுமியை அடித்து தாக்கி கீழே தள்ளினர். இதில், கீழே விழுந்த சீதாலெட்சுமியின் பின் தலையில் அடிபட்டு மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து ரேவதி, அவருடைய மாமியார் வள்ளி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






