என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே வாலிபரை மிரட்டி பணம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
அரியலூர்:
அரியலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது36). இவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார்.
இதையடுத்து பாருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வண்ணாங்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தின் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஜெயக் குமாரிடம் நாங்கள் பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை கண்டால் அரியலூரில் உள்ள அனைவரும் பயந்து நடுங்குவார்கள் என கூறி அரிவாளை கூறி மிரட்டி உள்ளனர்.
பின்னர் ஜெயக்குமாரிடம் இருந்த ரூ.2600யை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து அவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வல்லம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி(36), வடவார் அண்ணாபுரம் பகுதியை சேர்ந்த சுதா(30) என்பவர்கள் தான் ஜெயக்குமாரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.






