என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே மொபட்டில் சென்றவர் லாரி மோதி பலி: போலீசார் விசாரணை
ஈரோடு அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டை அடுத்த பேரோடு பகுதியில் உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 25).
இவர் செல்லப்பாளையம் அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் இருந்து தூக்கி எறியப்பட்ட மோகன் ராஜ் பலத்த காயம் அடைந்தார். தலை மற்றும் கால்கள், இடுப்பில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டை அடுத்த பேரோடு பகுதியில் உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 25).
இவர் செல்லப்பாளையம் அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் இருந்து தூக்கி எறியப்பட்ட மோகன் ராஜ் பலத்த காயம் அடைந்தார். தலை மற்றும் கால்கள், இடுப்பில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






