என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 வயதில் போலியோவால் பாதிப்பு - கருணை அடிப்படையில் வேலை வேண்டி மாற்றுத்திறனாளி மாணவி வேண்டுகோள்
    X

    5 வயதில் போலியோவால் பாதிப்பு - கருணை அடிப்படையில் வேலை வேண்டி மாற்றுத்திறனாளி மாணவி வேண்டுகோள்

    ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்ட தனக்கு கருணை அடிப்படையில் வேலை வேண்டி விண்ணப்பித்தார்
    ஈரோடு:

    கோபியை அடுத்த அரக்கன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிமிளா (வயது30). மாற்றுத்திறனாளி மாணவி.

    இவர் தனது அண்ணியுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோபியை அடுத்த அரக்கன்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது தந்தை வேலுசாமி. தாய் சரோஜா. கூலி வேலை செய்கிறார்கள்.

    எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே போலியோவால் எனது இருகைகளும், இரு கால்களும் செயல் இழந்து விட்டது.

    மற்றவர்கள் உதவியுடன் வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கிறேன். தற்போது எம்.ஏ.வரலாறு முடித்துள்ளேன். வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றேன். எந்த பதிலும் இல்லை. எனவே தாங்கள் இந்த விசயத்தில் தலையிட்டு எனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×