என் மலர்
செய்திகள்

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 3–ம் இடம் பிடித்து பள்ளி மாணவி சாதனை
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 3–ம் இடம் பிடித்து பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
திருப்பத்தூர்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாநில அளவிலான 17 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவிகளுக்கான சிலம்ப போட்டி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளி மாணவி பொன்னழகு கலந்து கொண்டு மாநில அளவில் 3–ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன், பள்ளி செயலர் குணாளன், பள்ளி முதல்வர் தேன்மொழி, நிர்வாக மேலாளர் சாத்தையா, மேலாளர் ஜோதிராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாநில அளவிலான 17 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவிகளுக்கான சிலம்ப போட்டி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளி மாணவி பொன்னழகு கலந்து கொண்டு மாநில அளவில் 3–ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன், பள்ளி செயலர் குணாளன், பள்ளி முதல்வர் தேன்மொழி, நிர்வாக மேலாளர் சாத்தையா, மேலாளர் ஜோதிராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






