என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் அடைக்கப்பட்ட தேவராஜனுக்கு 2 நாட்கள் பரோல்: மனைவி, மகள்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்
    X

    சிறையில் அடைக்கப்பட்ட தேவராஜனுக்கு 2 நாட்கள் பரோல்: மனைவி, மகள்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்

    மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தேவராஜனுக்கு 2 நாட்கள் பரோலில் சென்றுவர அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது
    கடலூர்:

    மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவராஜன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய மனைவியும், 2 மகள்களும் சென்னையில் தற்கொலை செய்துகொண்ட தகவல் தேவராஜனுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது மனைவி மற்றும் மகள்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் செல்ல அனுமதி கோரி சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதன்பேரில் அவர் 2 நாட்கள் பரோலில் சென்றுவர அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. மீண்டும் அவரை நாளை(திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்குள் சிறையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவு நகல் வந்ததும், நேற்று இரவு 7.55 மணிக்கு தேவராஜனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஒரு வேனில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
    Next Story
    ×