என் மலர்
செய்திகள்

குழந்தை தொழிலாளரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குழந்தை தொழிலாளரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் பேசினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பாலியியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதனை அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் கற்று தருவதை உறுதிச்செய்ய வேண்டும்.
மேலும், குழந்தை திருமணங்கள் நடைபெறாத வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் இல்லங்களும் இளைஞர் நீதி சட்டத்தில் பதிவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.
கூட்டத்தில், குற்றவியல் நீதித்துறை நடுவர்மகாலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பூமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதரணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், கோட்டாட்சியர்கள் மேகானராஜன் (அரியலூர்), ராஜகோபாலன் (உடையார்பாளையம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கா.முகமது யூனிஸ்கான், ஒங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, வட்டாட்சியர்கள், மாவட்ட காவல்துறை அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பாலியியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதனை அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் கற்று தருவதை உறுதிச்செய்ய வேண்டும்.
மேலும், குழந்தை திருமணங்கள் நடைபெறாத வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் இல்லங்களும் இளைஞர் நீதி சட்டத்தில் பதிவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.
கூட்டத்தில், குற்றவியல் நீதித்துறை நடுவர்மகாலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பூமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதரணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், கோட்டாட்சியர்கள் மேகானராஜன் (அரியலூர்), ராஜகோபாலன் (உடையார்பாளையம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கா.முகமது யூனிஸ்கான், ஒங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, வட்டாட்சியர்கள், மாவட்ட காவல்துறை அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






