என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: திருமாவளவன் பேச்சு
    X

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: திருமாவளவன் பேச்சு

    சித்தாமூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திருமாவளவன் பேசினார்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் விழா மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளத்தில் நடைபெற்றது.

    அங்குள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் சித்தாமூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுவாதி கொலையில் நீதி விசாரணை தேவை. சென்னையில் ஆசிரியை நந்தினியிடம் வழிப்பறி கொள்ளையில் 2 பேர் உயிரிழந்தனர்.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சென்னையில் பள்ளிகளின் அருகே விற்கப்படும் போதைப் பொருள் கலந்த சாக்லேட்டால் குழந்தைகளின் எதிர்காலம் நாசமாகும்.

    இதனால் போதை சாக்லேட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சூ.கு. ஆதவன் தலைமை தாங்கினார். மண்டல அமைப்புச்செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர்கள் கலைவடிவன், ராஜ்குமார், தேவ அருள்பிரகாசம், தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் மு.கலைக் கதிரவன் கலந்து கொண்டார்.
    Next Story
    ×