search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது
    X

    மயிலாடுதுறையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது

    மயிலாடுதுறையில் போதை பொருள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தீப்பாய்ந்தம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரிடம் விசாரணை செய்ததில் அவர் மாப்படுகை அவயாம்பாள்புரம் சார்லஸ்(53) என்பதும், அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்ததில் டயோசிபார்ம் என்ற போதை பவுடர் 600 கிராம் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த போதை பொருளை பறிமுதல் செய்து சார்லசை கைது செய்தனர்.
    Next Story
    ×