என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் பகுதியில் தூரல் மழை
    X

    வேதாரண்யம் பகுதியில் தூரல் மழை

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரவு 8 மணி முதல் தூரல் மழை பெய்தது. இந்த மழை 2 மணி வரை நீடித்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரவு 8 மணி முதல் தூரல் மழை பெய்தது. இந்த மழை 2 மணி வரை நீடித்தது. இதையொட்டி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2 மணி வரை மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்தனர். கொசு கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு தூக்கமின்றி தவித்தனர்.

    வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியிலும் மழை பெய்தது. வேதாரண்யத்தில் 2.4 மில்லி மீட்டர் மழையும், தலைஞாயிறில் 6.2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    இதே போல் திருவாரூரில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்பட சில இடங்களிலும் மழை பெய்தது.

    Next Story
    ×