என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே லாரி மோதி மாணவர் பலி
    X

    கூடுவாஞ்சேரி அருகே லாரி மோதி மாணவர் பலி

    கூடுவாஞ்சேரி அருகே லாரி மோதி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    கூடுவாஞ்சேரி அருகே உள்ள தனியார் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்து வந்தவர் அஜித்குமார் (வயது 20). புதுக்கோட்டையை சேர்ந்த இவர் உத்திரமேரூரில் தங்கி படித்து வந்தார்.

    கல்லூரி விடுமுறையை யொட்டி அஜித்குமார் உடன் படிக்கும் நண்பர் பிரவீன் குமாருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டார். கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் பலியானார். பிரவீன்குமார் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×