என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் இப்படியும் ஒரு கொடுமை: மாற்று திறனாளி மகனை ரோட்டில் போட்டு விட்டு மதுக்கடையில் தண்ணி அடித்த பெண்
ஈரோட்டில் 10 வயதுள்ள மாற்று திறனாளி சிறுவனை ரோட்டில் போட்டு மதுக்கடையில் தண்ணி அடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு நாடார்மேடு வழியாக நேற்று முன்தினம் ஒரு பெண் தள்ளாடிபடியே வந்தார். அவர் தன்னுடன் 10 வயதுள்ள மாற்று திறனாளி சிறுவனை அழைத்து கொண்டு வந்திருந்தார்.
இவர் அந்த வழியாக சென்ற போது திடீர் என்று அந்த சிறுவனை ரோட்டில் உட்கார வைத்து விட்டு சென்றார்.
நேராக அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற அவர் மது குடித்தார். பிறகு வெகு நேரமாகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.
இதை பார்த்து கொண்டு இருந்த அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள டிரைவர்கள் சிறுவனின் நிலையை கண்டு பரிதாபப்பட்டனர்.
உடனே இதுபற்றி ஈரோடு சைல்டு லைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த மாற்று திறனாளி சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த நேரத்தில் அந்த சிறுவனை விட்டு சென்ற பெண் மது போதையில் தள்ளாடிபடியே திரும்பி வந்தார்.
இதை பார்த்த சைல்டு லைன் நிர்வாகி ஜெகன் ராஜும், ஆட்டோ டிரைவர்களும் அந்த சிறுவனை அந்த பெண்ணிடம் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதன்பிறகு சோர்வாக இருந்த அந்த சிறுவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அப்போது "இந்த சிறுவனின் தாயார் வந்து கேட்டால் கொடுக்காதீர்கள். சிறுவன் முழுமையாக குணம் அடைந்த பிறகு விசாரித்து விட்டு பிறகு அவனை ஒப்படைக்கலாம்" என்று கூறி விட்டு சைல்டு லைன் அமைப்பினர் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்த சிறுவன் எனது மகன் தான். அவன் பெயர் அய்யப்பன் எனவே அவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டார்.இதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஷிப்டு மாறும் போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியாமல் அந்த பெண், அந்த சிறுவனை தூக்கி கொண்டு ஓடி விட்டார்.
இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் கூறும் போது அந்த பெண் வைத்திருந்த வங்கி பாஸ் புத்தகத்தில் அந்த சிறுவனின் படம் ஒட்டப்பட்டு அய்யப்பன் கரூர் என்று இருந்தது.
இவனுக்கு மாற்று திறனாளிக்கான உதவி தொகை அந்த வங்கி மூலம் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது என்று கூறினர்.
மாற்று திறனாளி சிறுவன் அய்யப்பனை அந்த பெண் எங்கு தூக்கி சென்றார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு நாடார்மேடு வழியாக நேற்று முன்தினம் ஒரு பெண் தள்ளாடிபடியே வந்தார். அவர் தன்னுடன் 10 வயதுள்ள மாற்று திறனாளி சிறுவனை அழைத்து கொண்டு வந்திருந்தார்.
இவர் அந்த வழியாக சென்ற போது திடீர் என்று அந்த சிறுவனை ரோட்டில் உட்கார வைத்து விட்டு சென்றார்.
நேராக அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற அவர் மது குடித்தார். பிறகு வெகு நேரமாகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.
இதை பார்த்து கொண்டு இருந்த அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள டிரைவர்கள் சிறுவனின் நிலையை கண்டு பரிதாபப்பட்டனர்.
உடனே இதுபற்றி ஈரோடு சைல்டு லைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த மாற்று திறனாளி சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த நேரத்தில் அந்த சிறுவனை விட்டு சென்ற பெண் மது போதையில் தள்ளாடிபடியே திரும்பி வந்தார்.
இதை பார்த்த சைல்டு லைன் நிர்வாகி ஜெகன் ராஜும், ஆட்டோ டிரைவர்களும் அந்த சிறுவனை அந்த பெண்ணிடம் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதன்பிறகு சோர்வாக இருந்த அந்த சிறுவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
அப்போது "இந்த சிறுவனின் தாயார் வந்து கேட்டால் கொடுக்காதீர்கள். சிறுவன் முழுமையாக குணம் அடைந்த பிறகு விசாரித்து விட்டு பிறகு அவனை ஒப்படைக்கலாம்" என்று கூறி விட்டு சைல்டு லைன் அமைப்பினர் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்த சிறுவன் எனது மகன் தான். அவன் பெயர் அய்யப்பன் எனவே அவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டார்.இதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஷிப்டு மாறும் போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியாமல் அந்த பெண், அந்த சிறுவனை தூக்கி கொண்டு ஓடி விட்டார்.
இதுபற்றி ஆட்டோ டிரைவர்கள் கூறும் போது அந்த பெண் வைத்திருந்த வங்கி பாஸ் புத்தகத்தில் அந்த சிறுவனின் படம் ஒட்டப்பட்டு அய்யப்பன் கரூர் என்று இருந்தது.
இவனுக்கு மாற்று திறனாளிக்கான உதவி தொகை அந்த வங்கி மூலம் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது என்று கூறினர்.
மாற்று திறனாளி சிறுவன் அய்யப்பனை அந்த பெண் எங்கு தூக்கி சென்றார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Next Story






