என் மலர்
செய்திகள்

அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி
சுவாதி கொலை கொலை வழக்கில் காவல்துறையினர் செயல்பட்டது போல நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
பொன்னமராவதி :
பொன்னமராவதியில் நடைபெற்ற தனியார் நிறுவன திறப்பு விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சுவாதி கொலை கொலை வழக்கில் காவல்துறையினர் செயல்பட்டது போல நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை அமைத்து குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் மின்சாரத் துறையினர் அதிக அளவு பணியாட்களை வைத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது த.மா.கா. தலைமை செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்டத்தலைவர்கள் மோகன்ராஜ், கூகூர் சண்முகம், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், நகரத்தலைவர் செந்தில், நாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பொன்னமராவதியில் நடைபெற்ற தனியார் நிறுவன திறப்பு விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சுவாதி கொலை கொலை வழக்கில் காவல்துறையினர் செயல்பட்டது போல நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை அமைத்து குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் மின்சாரத் துறையினர் அதிக அளவு பணியாட்களை வைத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது த.மா.கா. தலைமை செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்டத்தலைவர்கள் மோகன்ராஜ், கூகூர் சண்முகம், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், நகரத்தலைவர் செந்தில், நாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story






