என் மலர்
செய்திகள்

மைசூரு பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட இந்திய ஓநாய்
மைசூரு பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு இந்திய ஓநாய் கொண்டு வரப்பட்டது.
வண்டலூர்
மைசூரு பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு இந்திய ஓநாய் கொண்டு வரப்பட்டது.
வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மைசூரு ஸ்ரீசாமராஜேந்திர உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற முறை திட்டத்தின் கீழ் வசந்தன் என்ற இந்திய ஆண் ஓநாய் என்று நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இதன் வயது 7 மாதம் ஆகும். இத்துடன் சேர்த்து இந்த பூங்காவில் உள்ள இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை 2- ஆக உயர்ந்துள்ளது.
இதனை பார்வையாளர்கள் நேற்று முதல் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஓநாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த விலங்காகும். இந்த குடும்பத்தை சேர்ந்த 5 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அவை இந்திய ஓநாய், நரி, சிவப்பு குள்ள நரி, இந்திய குள்ள நரி மற்றும் செந்நாய் ஆகும். இவை அனைத்தும் தோற்றத்தில் ஒத்து இருந்தாலும் நிறம், அளவு, நீளம் மற்றும் முடிப்போர்வையின் வளமை ஆகியவற்றை வைத்து வேறுபடுத்தப்படுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரு பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு இந்திய ஓநாய் கொண்டு வரப்பட்டது.
வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மைசூரு ஸ்ரீசாமராஜேந்திர உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற முறை திட்டத்தின் கீழ் வசந்தன் என்ற இந்திய ஆண் ஓநாய் என்று நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இதன் வயது 7 மாதம் ஆகும். இத்துடன் சேர்த்து இந்த பூங்காவில் உள்ள இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை 2- ஆக உயர்ந்துள்ளது.
இதனை பார்வையாளர்கள் நேற்று முதல் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஓநாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த விலங்காகும். இந்த குடும்பத்தை சேர்ந்த 5 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அவை இந்திய ஓநாய், நரி, சிவப்பு குள்ள நரி, இந்திய குள்ள நரி மற்றும் செந்நாய் ஆகும். இவை அனைத்தும் தோற்றத்தில் ஒத்து இருந்தாலும் நிறம், அளவு, நீளம் மற்றும் முடிப்போர்வையின் வளமை ஆகியவற்றை வைத்து வேறுபடுத்தப்படுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






