என் மலர்
செய்திகள்

மாநில கபடி போட்டியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் தேர்வு: கடலூரில் நாளை நடக்கிறது
மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் கபடி அணிகள் தேர்வு நாளை காலை 10 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் உத்தரவின்பேரில் மாவட்ட செயலாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில சப் - ஜூனியர் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற ஜூலை 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளன. ஆண்களுக்கான போட்டி ராமநாதபுரம் மாவட்டத்திலும், பெண்களுக்கான போட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலும் நடைபெறுகிறது.
இந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் கபடி அணிகள் தேர்வு நாளை 3-ந்தேதி காலை 10 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
தேர்வு மாவட்ட கபடி கழக தேர்வு குழுவினரால் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தகுதிகள் வருமாறு: -
மாணவ - மாணவிகள் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் எடை 50 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.
இந்த தகுதி தேர்வுக்கு வரும் மாணவ - மாணவிகள் தங்கள் வயது சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
கபடி போட்டியில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்கள் மாநில போட்டிக்கு செல்ல போக்குவரத்து, உணவு மற்றும் சீருடை மாவட்ட கபடி கழகத்தினரால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் உத்தரவின்பேரில் மாவட்ட செயலாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில சப் - ஜூனியர் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற ஜூலை 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளன. ஆண்களுக்கான போட்டி ராமநாதபுரம் மாவட்டத்திலும், பெண்களுக்கான போட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலும் நடைபெறுகிறது.
இந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் கபடி அணிகள் தேர்வு நாளை 3-ந்தேதி காலை 10 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
தேர்வு மாவட்ட கபடி கழக தேர்வு குழுவினரால் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தகுதிகள் வருமாறு: -
மாணவ - மாணவிகள் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் எடை 50 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.
இந்த தகுதி தேர்வுக்கு வரும் மாணவ - மாணவிகள் தங்கள் வயது சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
கபடி போட்டியில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்கள் மாநில போட்டிக்கு செல்ல போக்குவரத்து, உணவு மற்றும் சீருடை மாவட்ட கபடி கழகத்தினரால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






