என் மலர்
செய்திகள்

கடலூரில் மாணவர்கள் கோஷ்டி மோதல்: 8 பேர் கைது
கடலூரில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் வன்னியர் பாளையம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன், மதன்குமார் ஆகியோர் கடலூர் புதுநகரில் உள்ள நகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.
அதே பள்ளியில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஷேக்முகமது மற்றும் வன்னியர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரும் பிளஸ்-2 படித்து வந்தார்கள்.
வாசுதேவன் தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும், ஷேக்முகமது தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வந்தனர். நேற்று புதுப்பாளையத்தில் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி அந்த வழியாக ரோந்து சுற்றிவந்தார். மோதலில் ஈடுபட்ட ஒருதரப்பைச் சேர்ந்த வாசுதேவன், மதன்குமார், வடிவேல், ராஜேஷ் ஆகிய 4 பேரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஷேக்முகமது, விக்னேஷ், சேகர், சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கடலூர் வன்னியர் பாளையம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன், மதன்குமார் ஆகியோர் கடலூர் புதுநகரில் உள்ள நகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.
அதே பள்ளியில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஷேக்முகமது மற்றும் வன்னியர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரும் பிளஸ்-2 படித்து வந்தார்கள்.
வாசுதேவன் தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும், ஷேக்முகமது தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வந்தனர். நேற்று புதுப்பாளையத்தில் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி அந்த வழியாக ரோந்து சுற்றிவந்தார். மோதலில் ஈடுபட்ட ஒருதரப்பைச் சேர்ந்த வாசுதேவன், மதன்குமார், வடிவேல், ராஜேஷ் ஆகிய 4 பேரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஷேக்முகமது, விக்னேஷ், சேகர், சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Next Story






