என் மலர்
செய்திகள்

வழக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி வழக்கீல்கள் ரெயில் மறியல்: 60 பேர் கைது
வக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 60 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.
புதுக்கோட்டை:
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சில திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு, உண்ணாவிரதம் என போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம்–புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் ஜூன் மாதம் 29–ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளிவில் வக்கீல்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் 6 பெண் வக்கீல்கள் உள்பட 60 பேர் ஒன்று சேர்ந்து பிச்சத்தான்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை நோக்கி ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர்.
வக்கீல்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சோனல் சந்திரா தலைமையில், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு, இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் உள்பட போலீசார் பல தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வக்கீல்கள் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வக்கீல்கள போலீசாரிடம் உள்ளே சென்று போராட்டம் நடத்த அனுதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் வக்கீல்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் அவர்களது கோரிக்கையை ஏற்காமல் வக்கீல்கல் 60 பேரையும் கைது செய்து வேனில் அழைத்து சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சில திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு, உண்ணாவிரதம் என போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம்–புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் ஜூன் மாதம் 29–ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதுக்கோட்டை கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளிவில் வக்கீல்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் 6 பெண் வக்கீல்கள் உள்பட 60 பேர் ஒன்று சேர்ந்து பிச்சத்தான்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை நோக்கி ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர்.
வக்கீல்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சோனல் சந்திரா தலைமையில், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு, இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் உள்பட போலீசார் பல தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வக்கீல்கள் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வக்கீல்கள போலீசாரிடம் உள்ளே சென்று போராட்டம் நடத்த அனுதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் வக்கீல்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் அவர்களது கோரிக்கையை ஏற்காமல் வக்கீல்கல் 60 பேரையும் கைது செய்து வேனில் அழைத்து சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
Next Story






