என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நாளை முதல் நடக்கிறது
    X

    அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நாளை முதல் நடக்கிறது

    அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நாளை 01.07.2016 முதல் 31.07.2016 வரை நடக்கிறது.

    அரியலூர்:

    ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக நாளை 01.07.2016 முதல் 31.07.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆண்டிமடம், தா.பழூர், ஜெயங் கொண்டம் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    மேலும், ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் பகல் 10.00 மணி முதல் 05.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்பதால் ஆதார் எண் பெறாத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து ஆதார் புகைப்படம் எடுத்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×