என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது: கலெக்டர் தகவல்
    X

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது: கலெக்டர் தகவல்

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 1.07.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 1.07.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் தேளுர், உடையார்பாளையம் வட்டத்தில் த.சோழன்குறிச்சி (வ) ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×