என் மலர்
செய்திகள்

கோபியில் திருமணம் பிடிக்காமல் நர்சு தற்கொலை
கோபி அருகே திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் நர்சு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
கோபி அருகே வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் குமார். இவர் இறந்துவிட்டார். இவரது மகள் மைதிலி (வயது 22). கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மைதிலி நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பெயர் அம்சவள்ளி.
மைதிலிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இந்த திருமணத்தில் மைதிலிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மைதிலி மனவேதனையில் இருந்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மைதிலி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஏன் திருமணம் பிடிக்கவில்லை? என்று தெரியவில்லை. இதுகுறித்து மைதிலியின் தாயார் அம்சவள்ளி கோபி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட நர்சு மைதிலி உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
கோபி அருகே வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் குமார். இவர் இறந்துவிட்டார். இவரது மகள் மைதிலி (வயது 22). கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மைதிலி நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பெயர் அம்சவள்ளி.
மைதிலிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இந்த திருமணத்தில் மைதிலிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மைதிலி மனவேதனையில் இருந்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மைதிலி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஏன் திருமணம் பிடிக்கவில்லை? என்று தெரியவில்லை. இதுகுறித்து மைதிலியின் தாயார் அம்சவள்ளி கோபி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட நர்சு மைதிலி உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
Next Story






