என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடத்தில் நள்ளிரவில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் கொள்ளை
    X

    பெண்ணாடத்தில் நள்ளிரவில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் கொள்ளை

    பெண்ணாடத்தில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உண்டியலை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தில் கங்கை மாரியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டுச் சென்றார்.

    இன்று காலை அன்பழகன் கோவிலை திறந்தார். அப்போது கோவிலின் உட்புறத்தில் இருந்த உண்டியலை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து பொது மக்கள் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது கோவிலில் கொள்ளை போன உண்டியல் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கரும்பு தோட்டத்தில் கிடப்பது தெரியவந்தது. கோவிலில் உண்டியலை பெயர்த்தெடுத்த கொள்ளையர்கள் அதனை கரும்பு தோட்டத்திற்கு கொண்டு சென்று உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் கங்கை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த மாதம் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் கோவில் உண்டியலில் காணிக்கையாக சுமார் 2½ லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கோவில் பூசாரி அன்பழகன் கூறினார்.

    பெண்ணாடத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொது மக்களிடையே அச்சம், பீதியும் ஏற்பட்டுள்ளது. போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×