என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபியில் திருமணம் பிடிக்காமல் நர்சு தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    கோபியில் திருமணம் பிடிக்காமல் நர்சு தற்கொலை: போலீசார் விசாரணை

    கோபியில் திருமணம் பிடிக்காததால் மனவேதனையில் இருந்த நர்சு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    கோபி வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் குமார். இவர் இறந்து விட்டார். இவரது மகள் மைதிலி (வயது 22).

    கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மைதிலி நர்சாக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பெயர் அம்சவள்ளி.

    மைதிலிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்தது. இந்த திருமணத்தில் மைதிலிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மைதிலி மனவேதனையில் இருந்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மைதிலி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஏன் திருமணம் பிடிக்கவில்லை? என்று தெரியவில்லை. இதுகுறித்து மைதிலியின் தாயார் அம்சவள்ளி கோபி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட நர்சு மைதிலி உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×