search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் புதுப்பெண் மாயம்
    X

    பண்ருட்டியில் புதுப்பெண் மாயம்

    பண்ருட்டியில் திருமணம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் மாயமாகி இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டி

    பண்ருட்டியை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முரளிதரன் (30). என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளி.

    முரளிதரனுக்கும் பக்கத்து ஊரான புலியூர் காட்டுசாகை கிராமத்தை சேர்ந்த சசிரேகா(24) என்பவருக்கும் 15 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இருவரும் புதுப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சசிரேகாவும், முரளிதரனும் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    காலையில் எழுந்து பார்த்தபோது சசிரேகாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முரளிதரன் மனைவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சசிரேகாவை தேடி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் மனைவியை காணவில்லை என்று கணவர் கொடுத்த புகாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×