என் மலர்
செய்திகள்

நளினி-பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய வேண்டும்: அரியலூரில் வைகோ பேட்டி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று அரியலூரில் வைகோ பேட்டியளித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து போட்டியிடும். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் சுவாதி கொலையில் உரிய விசாரணை நடத்தி கொலையாளியை உடனே கைது செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்களால் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது தெரியவருகிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். பணம் வாங்கி கொண்டு கொலைகளில் ஈடுபடும் கூலிப்படையினரின் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அவர்களை ஒழிக்க வேண்டும்.
தமிழக மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். வக்கீல்களுக்கு எதிரான சட்டம் வக்கீல்களின் உரிமையை பாதிக்கும். எனவே அவர்கள் போராட்டம் நடத்துவது நியாயமானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து போட்டியிடும். சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் சுவாதி கொலையில் உரிய விசாரணை நடத்தி கொலையாளியை உடனே கைது செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்களால் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது தெரியவருகிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். பணம் வாங்கி கொண்டு கொலைகளில் ஈடுபடும் கூலிப்படையினரின் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அவர்களை ஒழிக்க வேண்டும்.
தமிழக மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். வக்கீல்களுக்கு எதிரான சட்டம் வக்கீல்களின் உரிமையை பாதிக்கும். எனவே அவர்கள் போராட்டம் நடத்துவது நியாயமானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






