என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலந்தூரில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
    X

    ஆலந்தூரில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    ஆலந்தூரில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் லஸ்கர் தெருவை சேர்ந்தவர் அமல்சேகர். இவர் இன்று காலை பழுதான மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு ஆலந்தூர் ரவுண்டானா அருகே சென்றார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமல்சேகரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்த நிர்மல் ராஜ், ரஜினி ஆகியோரை கைது செய்தார்.

    Next Story
    ×