என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே மிளகாய் பொடியை தூவி தொழிலதிபர் மனைவியிடம் நகை பறிப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஜானகிநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலதிபர். இவரது மனைவி மாலதி (வயது 40).
சம்பவத்தன்று இரவு இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே, மாலதி எழுந்து சென்று கதவை திறந்தார்.
அப்போது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் 3பேர் , மாலதி மீது மிளகாய் பொடியை தூவி மயக்க மருந்தை தெளித்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 2 தங்க சங்கிலி உள்பட 20பவுன் தங்க நகைகளை பறித்தனர். மாலதி சத்தம் போடவே, ரவி விரைந்து சென்று மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது அவரை சரமாரி தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் காயமடைந்த ரவி, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






