என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தைலமர தோப்பு எரிந்து நாசம்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சொந்தமான தைலமரத்தோப்பின் வழியாக மின் கம்பிகள் செல்கின்றன. மின்கம்பிகள் தாழ்வாகவும், தைலமரத்தின் மீது உரசி கொண்டு செல்வதால் எந்த நேரத்திலும் தீப்பற்றி எரிய வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் ஊழியர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் உள்ள பீங்கான் வெடித்து அதன்வழியே ஏற்பட்ட தீ தைலமரத் தோப்பில் பற்றியது. தீ மளமளவென பற்றியதில் அங்கிருந்த மரங்கள் எரிந்தன.
இது குறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்கொடுத்ததின் பேரில் நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட தைலமரங்கள் எரிந்து நாசமானது.






