என் மலர்
செய்திகள்

குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மொய் பணம்-நகைகள் கொள்ளை
குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மொய் பணம்-நகைகள் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டை சி.எல்.சி. ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் உள்ளது. இன்று காலை கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரை சேர்ந்த காமராஜ் (56) என்பவரது மகள் தீபிகாவின் திருமணம் நடந்தது.
நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டினர் விருந்து சாப்பிட்டனர். அதன் பின்னர் மணமகள் அறைக்கு வந்தனர்.
அப்போது அங்கு வைத்திருந்த மணமகளின் 7 பவுன் தங்க நகைகள், மொய் பணம் ரூ.30 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் ஒரு கிலோ வெள்ளி சாமான்களை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா (சி.சி.டி.வி.) பதிவான வீடியோவை போட்டுப் பார்த்தனர்.
அதில் சந்தேகப்படும்படி 2 பெண்களும், ஒரு நபரும் நடமாடுவது தெரிந்தது. எனவே நகை மற்றும் பணத்தை இவர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
குரோம்பேட்டை சி.எல்.சி. ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் உள்ளது. இன்று காலை கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரை சேர்ந்த காமராஜ் (56) என்பவரது மகள் தீபிகாவின் திருமணம் நடந்தது.
நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டினர் விருந்து சாப்பிட்டனர். அதன் பின்னர் மணமகள் அறைக்கு வந்தனர்.
அப்போது அங்கு வைத்திருந்த மணமகளின் 7 பவுன் தங்க நகைகள், மொய் பணம் ரூ.30 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் ஒரு கிலோ வெள்ளி சாமான்களை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா (சி.சி.டி.வி.) பதிவான வீடியோவை போட்டுப் பார்த்தனர்.
அதில் சந்தேகப்படும்படி 2 பெண்களும், ஒரு நபரும் நடமாடுவது தெரிந்தது. எனவே நகை மற்றும் பணத்தை இவர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
Next Story






