என் மலர்
செய்திகள்

பெண்ணாடம் அருகே சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் மறியல்
பெண்ணாடம் அருகே சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி மேம்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்படாமல் மண்மேடாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி ஏற்பட்டு அந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் மேம்பாலத்தின் மீது உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாததால், இரவில் இருள்சூழ்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெ.பொன்னேரி கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு வந்து விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் ராஜா, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 நாட்களில் தற்காலிக சாலை அமைத்து தருவதாகவும், அடுத்த 15 நாட்களில் முறையான அனுமதி பெற்று நிரந்தர சாலை அமைத்து தருவதாகவும் உறுதியளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பெண்ணாடம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி மேம்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்படாமல் மண்மேடாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி ஏற்பட்டு அந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் மேம்பாலத்தின் மீது உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாததால், இரவில் இருள்சூழ்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெ.பொன்னேரி கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு வந்து விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் ராஜா, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 நாட்களில் தற்காலிக சாலை அமைத்து தருவதாகவும், அடுத்த 15 நாட்களில் முறையான அனுமதி பெற்று நிரந்தர சாலை அமைத்து தருவதாகவும் உறுதியளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story






