என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டல் கோவிலில் காதல் திருமணம் செய்த ஜோடி சத்தி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
    X

    திண்டல் கோவிலில் காதல் திருமணம் செய்த ஜோடி சத்தி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

    காதல் திருமணம் செய்த ஜோடி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் தங்கராஜ் (வயது27). இவர் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகள் சரண்யா (21). பி.எஸ்.சி. பட்டதாரி.

    சரண்யாவின் சகோதரர் சந்தோஷ் என்பவரும், தங்கராஜூம் நண்பர்கள் நண்பன் வீட்டுக்கு வந்த போது தங்கராஜிக்கும், சரண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு சரண்யா வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் காதலை கைவிடாத காதல் ஜோடியினர் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு திண்டலுக்கு வந்தனர். அங்குள்ள விநாயகர் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    காதல் திருமணம் செய்த கையோடு காதல் தம்பதியினர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சத்தியமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×