என் மலர்
செய்திகள்

தரமணியில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
தரமணியில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி:
தரமணி அம்பிகா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். வேளச்சேரி காந்தி ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார்.
மதியம் வந்த போது வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து 3½ பவுன் நகை, ரூ.22 ஆயிரம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு சென்று விசாரிக்கிறார்கள்.
Next Story






