என் மலர்
செய்திகள்

மூடப்படும் மதுக்கடைகளுக்கு பதிலாக கள் கடைகளை திறக்க வலியுறுத்தல்
அரச்சலூர்:
தமிழ்நாடுகள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கள் போதை பொருளோ, தடை செய்யப்பட வேண்டிய பானமோ அல்ல. அது சத்தான உணவு. கள்ளுக்கான 29 ஆண்டு கால தடை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உலகலாவிய நடைமுறைக்கு எதிரானவை.
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் மதுகடைகள் மூடப்பட்டுள்ளன. இதை கள் இயக்கம் வரவேற்கிறது. மூடப்பட்ட இந்த மது கடைகள்கள் விற்பனை நிலையங்களாக மாற்றப்பட வேண்டும்.
இதை நாங்கள் அரசுக்கு கோரிக்கையாகவே வைக்கிறோம். இதனால் மது விற்பனையாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படாது.
கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் தான். இதுவும் மதுவே என கள்ளை எதிர்க்கும் எதிர் கட்சிகளின் கொட்டத்தை ஒடுக்கும் சக்தி கள் இயக்கத்துக்கு உண்டு.
எனவே அரசு கேரளாவை பின் பற்றும் விதமாக கள் உற்பத்தியையும், நுகர்வையும் பெருக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






